மின்கோபுரங்கள் விவகாரத்தில் வைகோ தவறான தகவல் : அமைச்சர் தங்கமணி

மின்கோபுரங்கள் அமைக்கும் விவகாரத்தில், மதிமுக பொதுச்செயலாளர் தவறான தகவலை கூறுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை யொட்டி, மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, புதிதாக கழிப்பிடம் கட்ட, பூமிபூஜை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்கோபுரங்கள் அமைக்கும் விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் தவறான தகவலை கூறிவருவதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version