வைகோ, வேல்முருகன் பாராட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி

கஜா புயலில் சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதை பாராட்டிய வைகோ மற்றும் வேல்முருகனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நகர்பகுதிகளில் 98 சதவிகிதம் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 75 சதவிகிதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மரங்கள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் ஆகியவை மண்டையில் விழுந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக ஸ்கேன் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version