வைகோ கலந்துகொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் அடிதடி

கும்பகோணத்தில், வைகோ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் அடிதடி சம்பவம் அரங்கேறியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, பழைய மீன் மார்க்கெட் அருகில், தி.மு.க கூட்டணி கட்சியினரின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க.பொது செயலாளர் வை.கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது, வைகோவின் பாதுகாப்பிற்காக வந்த தொண்டர் அணியினர், மேடைக்கு அருகில் இருந்தவர்களை கண்மூடி தனமாக தள்ளி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.கவினரும், ம.தி.மு.க தொண்டர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

Exit mobile version