திமுகவை எங்களை விட அதிகமாக விமர்சித்தவர் வைகோ – அமைச்சர் செல்லூர் ராஜூ

ஸ்டாலினை முதலமைச்சராக்குவோம் என கூறி வரும் வைகோவின் பேச்சை, மக்கள் கேட்கும் மனநிலையில் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பரவையில், 218 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார். பின்னர், பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுகவை எங்களை விட அதிகமாக விமர்சித்தவர் வைகோ என்றும் அவரது பேச்சை யாரும் கண்டு கொள்ள தேவையில்லை எனவும் கூறினார். பொதுவான எதிரி வந்தால் நாங்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் என்று அவர் தெரிவித்தார்.

 

 

 

Exit mobile version