மோடியின் ஆட்சி சர்வாதிகார ஆட்சிபோல் உள்ளது – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அதிகாரத்தையும் பதவியையும் மக்கள் பறிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் விக்ரமனின் நினைவு தின விழா சென்னை, வாணி மகாலில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளைப் பார்க்க மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.

மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் அனுமதி இனி தேவையில்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் மோடி அரசு சர்வாதிகார ஆட்சிபோல் உள்ளது என்றும் கூறினார்.

வெளிநாடு செல்வதற்கும், வித விதமாக உடைகளை உடுத்திக் கொள்வதற்கும் மோடி அடிமையாகி விட்டார் என்றும், அவரிடம் இருந்து அதிகாரத்தையும், பதவியையும் மக்கள் பறிக்க வேண்டும் என்றும் அப்போது வைகோ கூறினார்.

 

 

 

Exit mobile version