தேனியில் வைகை அணையில் நீர்மட்டம் உயர்வு

தொடர் நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 50அடியைக் கடந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் கடந்த மாதம் 27 அடியாக நீர் மட்டம் இருந்த நிலையில், தேனி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 15 நாட்களில் 20 அடிக்கு மேல் உயர்ந்து 50அடியைத் தாண்டியுள்ளது. அணைக்கு நொடிக்கு ஆயிரத்து 285 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதுரை மாநகரக் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து நொடிக்கு 60 கனஅடி தண்ணீர்
திறக்கப்படுகிறது.

Exit mobile version