ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம்

வடபழனி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிமுதல் இரவு 11 மணிவரை சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவு தரிசனத்திற்காக 50 மற்றும் 100 ரூபாய் கட்டணங்களில் தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்ல, மாநகர போக்குவரத்து கழகம் சென்னையின் முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், பாதுகாப்பு நலன் கருதி ஏராளமான காவல்துறையினர் கோயிலைச் சுற்றி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version