கொரோனா தடுப்பூசி இல்லை – மக்கள் ஏமாற்றம்

 கொரோனா தடுப்பூசி செலுத்த காலைமுதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பல இடங்களில் குறைவான எண்ணிக்கையில் டோக்கன் வழங்கப்படுவதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நாமக்கல் நகரில் கோட்டை சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாத நிலையில் இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து காலை 6 மணிமுதல் பொதுமக்கள் காத்திருந்த நிலையில், 8 மணிக்கு கொரோனா தடுப்பூசி இல்லை என அதிகாரிகள் அலட்சியமாக பதில் சொன்னதால், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுப்பூசி இருப்பு குறித்து முன்கூட்டியே தகவல் சொல்வதில் என்ன பிரச்னை என கேள்வி எழுப்பிய பொதுமக்களை, காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Exit mobile version