கும்பகோணத்தில் தடுப்பூசி இருப்பு இல்லை – பொதுமக்கள் ஏமாற்றம்

கும்பகோணம் நகரில் நான்காவது நாளாக கொரனா தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

கும்பகோணம் நகராட்சி காரனேசன் மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது . கடந்த 4 நாட்களாக இம்மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். முதல் தவணை தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் தற்போது ஆர்வம் காட்டி வரும்
நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version