12 -17 வயது சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை; அனுமதி கேட்பு

கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் ஆய்வுக்கு அனுமதி கேட்டு, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

அமெரிக்காவின் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, சிங்கிள் டோஸ் கொண்டது. இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கடந்த 7ம் தேதி இந்தியாவிலும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் ஆய்வுக்கு அனுமதி கேட்டு, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 12 வயது முதல் 17 வயதுடைய சிறார்களிடம் தடுப்பூசி பரிசோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version