நியாய விலை கடைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது!

தமிழக நியாய விலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். சென்னையில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட நியாயவிலை கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என ஜூன் மாதம் 19ம் தேதி கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏராளமானோர் நேரிலும், தபால் மூலமாக விண்ணப்பத்து வருகிறார்கள். இந்நிலையில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் சென்னை அபிராமபுரத்தில் உள்ள கூட்டுறவுத்துறை துறையின் சென்னை மண்டல அலுவலகத்தில் ஏராளமானோர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இன்றியும், மற்ற பிரிவினர் விற்பனையாளருக்கு 150 ரூபாயும் கட்டுனர் பணியிடத்திற்கு 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

Exit mobile version