தன்னாலே வெளிவரும் தயங்காதே…ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே – உழவர் உழைப்பாளர் கழகத் தலைவர் புகழாரம்!

ஈரோட்டில் நடைபெற்று வரும் அதிமுக வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டதில் உரையாற்றிய உழவர் உழைப்பாளர் கழகத் தலைவர் செல்லமுத்து, கே.எஸ். தென்னரசு அவர்களை ஆதரித்து பேசினார். பேசத் தொடங்குமுன் புரட்சித் தலைவரின் பாடலை எதிர்கட்சித் தலைவருக்காக பாடினார். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்றப் பாடலுடன் தனது உரையைத் துவங்கினார். வீரத்திலும் தீரத்திலும் சிறந்தவரான எதிர்கட்சித் தலைவருக்கும் அவருக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் பெருமக்களுக்கும் வணக்கத்தினை முதலில் கூறினார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் பொருள் கொடுத்தாலும் நமது ஈரோடு மக்களின் கைகள் இரட்டை இலையைத் தவிர வேறு எந்த சின்னத்தை நோக்கியும் செல்லாது என்று குறிப்பிட்ட அவர். அதிமுகவின் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு மாபெரும் வெற்றி பெறுவார் என்று எழுச்சியாக பேசினார்.

Exit mobile version