பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்

பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்…

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு நிக்கியது. இதனால் இந்தியா ,பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை குறித்து பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் இந்தியா பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளதாகவும், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலை தணிக்க முயற்சிப்பதில் மகிழ்ச்சி அடைவதகாவும் டிரம்ப் கூறியுள்ளார்.

Exit mobile version