சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை..

சீனாவின் வூகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா உலக அளவில் பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக வூகான் ஆய்வகத்தில் சோதனை மேற்கொள்ள அமெரிக்க அனுமதி கோரிய நிலையில், சீனா அதனை திட்டவட்டமாக மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க சீனா தவறிவிட்டதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த விவகாரத்தில் சீனாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கும் நிலை ஏற்படுமென எச்சரித்துள்ளார்.

Exit mobile version