அமெரிக்கா-வடகொரியா இரு நாட்டு அதிபர்களும் பிப் மாத இறுதியில் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தொடர்பாக அந்நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் மோதல் போக்கு உருவானது. இதனையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே டிரம்ப், கிம் இடையேயான சந்திப்பு கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் அணு ஆயுத சோதனை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. எனினும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், அணு ஆயுத கொள்கைக்கு திரும்ப உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, வடகொரிய தூதர் கிம் யோங் சோல், அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில், டோனால்டு டிரம்ப், கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Exit mobile version