சவுதி அரேபியா பாதுகாப்புக்கு 3,000 வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு

கடந்த மாதம் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையான சவுதி அரம்கோ எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு காரணம் ஈரான் என சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் குற்றம்சாட்டின. இந்தநிலையில், சவுதி அரேபியாவின் பாதுகாப்புக்கு கூடுதல் படைகளை அனுப்பும்படி அமெரிக்காவிடம் சவுதி அரசாங்கம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து 3 ஆயிரம் வீரர்களை சவுதிக்கு அனுப்புவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version