வலை வீசியும் சிக்காத கொள்முதல் நிலைய அதிகாரிகள் ; விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலையில், விடுமுறை நாட்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில், கொள்முதல் இலக்கை எட்ட, விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விடுமுறை நாட்களில் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அரசு அதிகாரிகளை, வலை வீசி தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் விதமாக, விவசாய சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வலையை விரித்து, அரசு அதிகாரிகள் யாரும் சிக்கவில்லை என்று முழக்கமிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது பேசிய விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்திய பின்னும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகத் தெரிவித்தனர்.

Exit mobile version