அப்பர் ஆழியாறு அணையிலிருந்து அழியாறு அணைக்கு தண்ணீர் திறப்பு

முன்கூட்டியே கோடைகாலம் தொடங்கியுள்ளதால் பொள்ளாச்சி ஆழியாறு ஆணையில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக அப்பர் அழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியையொட்டி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் கடந்த மூன்று மாதங்களில் பெய்த கனமழையால் ஆழியாறு அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டியிருந்தது. ஒப்பந்தப்படி கேரளாவிற்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மழை இல்லாமல் போனதால் 120 அடியிலிருந்து 50 அடியை தொட்டது. இதன் விளைவாக நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுவதால் கோடை காலத்தினை சமாளிப்பதற்காக அப்பர் ஆழியாறு அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்ப்குதி விவசாயிகள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version