பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும், காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்களும், பேராசிரியர்களும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, டிசம்பர் மாதம் நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள், ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் தேதி ஒரு வாரத்திற்கு முன்பாக மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும், அரசின் உத்தரவை மீறி தேர்வு நடத்தும் கல்லூரிகள் மூடப்படும் என்றும் உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

Exit mobile version