அணை பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் அணைகளை பராமரிப்பதற்கு ஒரே சீரான நடைமுறைகளை கொண்டு வருவதற்கான அணை பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அணைகளை கண்காணித்து உரிய முறையில் பராமரிக்க மாநில அளவிலும் தேசிய அளவிலும் குழு அமைத்து செயல்பட அணை பாதுகாப்பு மசோதா வழிவகுக்கிறது. மேலும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் என்கிற அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆணையம் மாநிலங்களிடம் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தும். தேசிய அளவில் அணைகள் சார்ந்த அனைத்து தகவல் கட்டமைப்பையும் பராமரிக்கும்.

Exit mobile version