சீரான குடிநீர் விநியோகம்: தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிசெவியூர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துகொண்டே செல்வதால் கிராம மக்கள் கூடுதல் குடிநீர் வழங்க வேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு, கெட்டிசெவியூர், ஜெ.ஜெ.நகர் பகுதியில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்து நவீன மின்மோட்டார் மூலம் தரைமட்ட மற்றும் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்க உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version