மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடபுத்தகம் விநியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி துவக்க நாளில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் மற்றும் இந்தாண்டுக்கான புதிய பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆசிரியர் சங்க தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இதனையடுத்து நடந்து முடிந்த அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கி பாராட்டினார்.

Exit mobile version