திருவள்ளூரில் நகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

திருவள்ளூரில் நகைக் கடை பூட்டை உடைத்து 35 சவரன் தங்கம், 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் 80 வைரக்கற்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் கொண்டமாபுரம் தெருவில் சாந்தி ஜுவல்லர்ஸ் என்ற தங்க நகைக்கடை உள்ளது. இக்கடையின் முன்பக்கமாக உள்ள இரும்பு கதவின் பூட்டுக்கள் வெல்டிங் மெசின் கொண்டு உடைக்கப்பட்டுள்ளது. கடையில் இருந்த 35 சவரன் தங்க நகைகள், ஐந்து லட்சம் ரூபாய் பணம், ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான 80 வைரக்கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version