கோவை, ஈரோடு மாவட்டங்களில் கட்டுக்கடங்காத கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேர் உட்பட புதிதாக 19 ஆயிரத்து 448 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 765 பேர் ஆண்கள் என்றும், 8 ஆயிரத்து 683 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. சென்னையில் மேலும் ஆயிரத்து 530 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 918 ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 564 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 646 பேரும், திருப்பூரில் ஆயிரத்து 27 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 997 பேரும், செங்கல்பட்டுவில் 837 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

31 ஆயிரத்து 360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 351 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 248 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 103 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Exit mobile version