தடுப்பூசி மையத்தில் குவிந்த மக்கள் – கொரோனா பரவும் அபாயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

புளியங்குடியில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வாசுதேவநல்லூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக எம்பி ஆகியோர் முகாமை தொடங்கி வைக்க பெரிய படையுடன் ஒன்று கூடினர். பாதுகாப்பு இடைவெளியின்றி நடைபெற்ற இந்த முகாமில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முண்டியடித்துக் கொண்டனர். அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் நூற்றுக்கணக்கனோர் ஒரே இடத்தில் ஒன்று திரண்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Exit mobile version