இங்கிலாந்துக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு

இங்கிலாந்துக்கு சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான ஸ்டென்னா இம்பெரோ (Steno Impero) எண்ணெய் கப்பலை சிறை பிடித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. கப்பலை தொடர்புகொள்ள முடியவில்லை என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கப்பலில் 25 பேர் பயணத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்ற இங்கிலாந்தின் மற்றொரு கப்பலின் பயணத்தை தொடர ஈரான் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கப்பலை விடுவிக்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது

Exit mobile version