உதயநிதி ஸ்டாலின் அந்தர் பல்டி – என்ன காரணம்?

விநாயகர் சதுர்த்தி அன்று உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து, விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின், தனக்கும், தனது மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை என்றும், தனது மகளின் விருப்பத்தின் பேரில் ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் படத்தை பதிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் படத்தை பதிவிட்டு, தமக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று உதயநிதி அந்தர் பல்டி அடித்துள்ள நிலையில், அவர் பழனியில் சாமி தரிசனம் செய்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version