சயன், மனோஜ் ஜாமீனை ஏன் ரத்து செய்யக்கூடாது?

கொடநாடு வழக்கில் சயன் மற்றும் மனோஜிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று உதகை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை நடந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் உதகை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜுக்கு கடந்த ஆண்டு ஜாமீன் வழங்கியது. கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது பழி சுமத்தியிருப்பதால், இருவரின் ஜாமீனையும் ரத்து செய்யக்கோரி காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், ஜாமீனை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, வரும் 24 ஆம் தேதிக்குள் சயன், மனோஜ் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Exit mobile version