உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே விரைவில் மகாராஷ்ட்ர துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு?

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே விரைவில் மகாராஷ்ட்ர துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…

மகராஷ்ட்ராவில் பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலிலும் அக்கூட்டணி அமோக வெற்றிபெற்றது.. வரும் சட்டமன்ற தேர்தலிலும் அக்கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பால் தாக்கரேவின் பேரனும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியினர் கேட்டு வருகிறார்கள்.. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பட்நாவிஸ், ஆதித்யா தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவி தர காத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.. சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் என்றில்லை , இப்போதே தர காத்திருப்பதாக கூறியுள்ளார்.. தாக்கரே குடும்பத்தில் இருந்து அமைச்சரவையில் பங்கேற்கும் முதல் நபர் என்பதால் அவருக்கு பதவி அளிப்பதில் பெருமைபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version