புற்றுநோய் குறித்த இரண்டு பெண்கள் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சுற்றுப்பயணம்

புற்றுநோய் குறித்த, இந்தியா முழுவதும் விழிப்புணர்வு இருசக்கர வாகன சுற்றுப்பயணம் செய்து வரும் இரண்டு பெண்கள், தூத்துக்குடி வந்தடைந்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த வைசாலி என்பவர் இந்தியா முழுவதும் இருசக்கர வாகன சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவருடன் சுப்ரியா என்கிற பெண்ணும் இந்த விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று தூத்துக்குடி வந்த இருவரையும் அப்பகுதிமக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். விழிப்புணர்வு பயணம் குறித்து பேசிய வைசாலி, இந்த விழிப்புணர்வுக்காக இதுவரை 4000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளதாகவும் இறுதியாக விசாகப்பட்டிணத்தில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version