திண்டிவனத்தில் தொடர் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் கைது

திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர்ந்து நகைகளை கொள்ளையடித்து வந்த பெண் தப்பியோட முயன்றபோது, சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள நொளம்பூர் கிராமத்தே சேர்ந்த மணிவண்ணன் என்பவரது வீட்டில் புகுந்த பெண்கள் சிலர், வீட்டிருலிருந்த 35 சவரன் நகையை திருடி விட்டு தப்பியோட முயற்சித்துள்ளனர்.கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், தப்பி ஓட முயன்றவர்களில் ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் பெயர் கல்பனா என்பதும், திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில், இவருடன் மேலும் சிலர் தொடர்ந்து திருடி வந்ததும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், லட்சுமி என்பவரை கைது செய்து, மேலும் இரண்டு பெண்களை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version