தனியார் தோட்டத்தின் கிணற்றில் மறைந்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தனியார் தோட்ட கிணற்றில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை அருகே, விசுவநாதபுரத்தில் இருளப்பதேவர், கோட்டைச்சாமி தேவர் ஆகியோருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் கிணற்றில் கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், 2 இருசக்கர வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் கிணற்றில் சோதனை செய்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர். இந்த வாகனங்களை யார் கொண்டு வந்து போட்டார்கள்? எதற்காக கொண்டு வந்து போட்டார்கள்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version