கோவை மாவட்டம் குனியமுத்தூரில் 150 பயனாளிகளுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
குனியமுத்தூரில் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, 150 பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக செய்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், கோவையில் பல இடங்களில் பாலங்கள் கட்டி முடிக்கப் பட்டுள்ளதால் விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.