திருநெல்வேலியில் 146 பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

திருநெல்வேலியில் 146 பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

தமிழக அரசு பெண்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாகப் பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நாலாயிரத்து ஐந்நூறு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 146 பயனாளிகளுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா வழங்கினார்.

Exit mobile version