இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்த மிதலைக்குளம் பகுதியை சேர்ந்த சூர்யகுமார் என்பவர் அவரது மனைவி, தங்கை மற்றும் 8 மாத குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் குண்டு கிராமம் பகுதி வழியாக பயணம் செய்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அதே பகுதியை தங்கமணி மற்றும் அவருடன் கந்தசாமி ஆகிய இருவர் பயணம் செய்துள்ளனர். இதனிடையே இரண்டு இருசக்கர வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தங்கமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சூர்யகுமார் மற்றும் அவரது குழந்தையும் பரிதாமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version