மணல் கடத்திய இரண்டு டிராக்டர்கள் பறிமுதல்

சேலம் அருகே மணல் கடத்திய இரண்டு டிராக்டர்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள சரபங்கா நதியில் அரசு அனுமதியின்றி மர்ம நபர்கள் டிராக்டர்களில் மணல் கடத்துவதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பெருமாள் என்பவருக்கு சொந்தமான இரண்டு டிராக்டர்களில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Exit mobile version