சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 ஆயிரம் அரிய வகை ஆமைகள்

திருச்சி விமான நிலையத்தில், சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 ஆயிரம் அரிய வகை ஆமைகளை, திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்துக்கு, கோலாலம்பூரிலிருந்து இருந்து மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இதில் சென்னையை சேர்ந்த பீர் முகமது முஸ்தபா 8 அட்டை பெட்டியில் உயிரோடு இருக்க கூடிய 2 ஆயிரம் அரிய வகை ஆமைகளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. வனத்துறையினர் அந்த ஆமைகளை ஆய்வு செய்தபோது அவை சீனாவில் வளரக்கூடிய அரிய வகை ஆமைகள் என்பதும், அவற்றை சீனாவில் இருந்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து 2 ஆயிரம் ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், நாட்டின் சீதோசன நிலைக்கு இந்த ஆமைகள் ஏற்றத்தல்ல என்பதால், அவைகள் சீன நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.

Exit mobile version