இரு டாஸ்மாக் கடைகளில் கொள்ளை அடித்த கொள்ளையன் கைது

திண்டுக்கல்லில் அடுத்தடுத்து இரு டாஸ்மாக் கடைகளில் கொள்ளை அடித்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே உள்ள யாகப்பன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதேபோல் மொட்டனம்பட்டி டாஸ்மாக் கடையிலும் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் இரு மதுபான கடைகளில் கொள்ளை அடித்தது திண்டுக்கல்லைச் சேர்ந்த பூச்சி என்ற ஆண்டனி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version