ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது ராணுவ வீரர்கள் 2 பேர் மரணம்

ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆக்னூர் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியை அகற்ற முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கண்ணி வெடி திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் வீரர்கள் 2 பேர் மரணமடைந்தனர். படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version