மேத்யூ, சயன் ஆகியோரிடம் விசாரணை நடத்த இரு தனிப்படைகள்

முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய மேத்யூ மற்றும் சயன் ஆகியோரிடம் விசாரணை நடத்த இரு தனிப்படைகள் டெல்லி விரைந்துள்ளன. சமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேத்யூ மற்றும் சயன் ஆகியோரை விசாரிப்பதற்காக துணை ஆணையர்கள் தலைமையிலான இரு தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்துள்ளனர்.

Exit mobile version