வழிப்பறி செய்த திமுக பிரமுகரின் மகன் உட்பட இருவர் கைது

சென்னை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகரின் மகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மணலி சாஸ்திரி நகரைச் சேர்ந்த செல்வகணேசன், தனது நண்பர்களுடன் ஓட்டேரியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அயனாவரம், திக்காகுளம் திமுக வட்டச்செயலாளர் கணேஷ் குமார் மற்றும் பிரபு உட்பட 3 பேர் சேர்ந்து, செல்வகணேசனை வழிமறித்து, அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த ஓட்டேரி காவல்துறையினர் கணேஷ்குமார், மற்றும் பிரபு ஆகியோரை கைது செய்து இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்கள் மற்றும் 1,500 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, தலைமறைவாக உள்ள விக்கி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version