காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இருவர் பலி

ஜம்மு-காஷ்மீரின் ராம்பூர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட இருவர் உயிரிழந்தனர்.

ராம்பூர் செக்டாரை ஒட்டியுள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் ஹாஜிப்பூர் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர். அதில் பலத்த காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து எல்லைப் பகுதியில், இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version