சென்னை, திருச்சி வந்தடைந்த இருவருக்கு கொரோனா வைரஸ் இல்லை

சீனாவில் இருந்து சென்னை மற்றும் திருச்சி வந்த பயணிகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் உள்ள இந்தியர்களில் 324 பேரை மத்திய அரசு தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்து, தனி மருத்துவ முகாமில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் சீனாவில் இருந்து சென்னை வந்த சீன பயணிக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. அதேபோல், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த தமிழக பயணிக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி தென்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இருவருக்கும் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

Exit mobile version