தேனியில் கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது

தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கூடலூரில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தபடுவதாக உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு போலிசாருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க குடிமைபொருள் குற்ற புலனாய்வு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளாவிற்கு காய்கறி ஏற்றிச் சென்ற மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்தபோது ரேசன் அரிசி மூட்டைகளை காய்கறி மூடைக்குள் மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறையினர், ஒன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version