கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருவர் குணமடைந்தனர்!

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர், கொரோனாவிலிருந்து குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரானோ நோய் தொற்று தொடர்பாக இதுவரை, ஆயிரத்து 763 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில், ஆயிரத்து 632 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 89 பேரின் ரத்த மாதிரி முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனத் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, தமிழகத்தில் இதுவரை 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர், கொரோனாவிலிருந்து குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. 

Exit mobile version