ரவுடி குமரேசன் கொலை வழக்கில் மேலும் 2 ரவுடிகள் கைது

கடந்த ஜனவரி மாதம் சென்னை அரும்பாக்கத்தில் ரவுடி குமரேசன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு அருகே கடந்த ஜனவரி மாதம் பிரபல ரவுடி குமரேசனை வழி மடக்கிய கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்தது ரவுடி சகாயம் மற்றும் அவரது கூட்டாளிகள் எனத் தெரியவந்தது. இதில் ஏற்கனவே சகாயராஜ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த காவல்துறையினர், இக்கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் அமைந்தகரை ஸ்கைவாக் அருகே சென்று கொண்டிருந்த பாம்பு வினோத் மற்றும் பாக்கியராஜ் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வெங்கடேசனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Exit mobile version