காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச்சூடு: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். இதில் இருதரப்பிலும் தொடர் உயிரிழப்புகள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் எல்லை மாவட்டமான சோபியானின் அவ்நீரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அதிகாலை முதலே அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் தொடர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

Exit mobile version