ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில், பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கவஜ்போரா ரேபான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பின்னர் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். எஞ்சிய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.a

Exit mobile version