மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கி, செயின் பறிக்க முயன்ற இருவர் கைது

சென்னை மத்திய கைலாஷில், மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கி, செயின் பறிக்க முயன்ற இருவரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுஜாதா, கடந்த 20-ஆம் தேதி இரவு கணவர் மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

மத்திய கைலாஷ் அருகே சென்று கொண்டிருந்த போது, அவர்களை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இருவர், சுஜாதா அணிந்திருந்த கவரிங் செயினை, தங்க செயின் என நினைத்து பறிக்க முயன்றுள்ளனர்.

இதில் சுஜாதா நிலை தடுமாறி கணவர் மற்றும் மகளுடன் கீழே விழுந்துள்ளார்.

மர்ம நபர்கள் சுஜாதாவை தாக்கி செயினை பறிக்க முயன்றுள்ளனர். அருகில் இருந்தவர்கள் கூடியதால் மர்மநபர்கள் தப்பியுள்ளனர்.

இது தொடர்பான புகாரில், சிசிடிவி காட்சி உதவியுடன் திருவான்மியூரைச் சேர்ந்த குமராவேல், செம்மஞ்சேரியைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரையும் கோட்டூர்புரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 3 உயர் ரக இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version