சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள 7ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி வந்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தீபன்தாஸ், ராஜேந்திரன் ஆகியோரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மோகன்குமார் என்பவரையும் தேடி வருகின்றனர்.

Exit mobile version